Thursday 20 March 2008

திருவள்ளுவர் ஓரினசேர்கை காமவெறியனாம்-ஏசு போதிக்கும் இந்தியவரலாறு

திருவள்ளுவர் ஓரினசேர்க்கை காமவெறியனாம் - ஏசு போதிக்கும் இந்திய வரலாறு

கிறிஸ்தவ மிஷனரிகளின் கெட்டிக்காரதனம் எப்படி ? இந்தியாவுக்குள் புகுந்து காலூன்றி, மெல்ல மெல்ல இந்திய வரலாற்றை அறிந்து, அதை எப்படி திரிக்கலாம் என்று ஆராய்ந்து, பாமரனும் நம்பிவிடும் வகையில் திரித்து எழுதியது மட்டுமல்லாது, பாதுகாப்பில்லாமல் திறந்து கிடக்கும் இந்தியாவில் ஒவ்வொரு கிராமமாக, ஊழியம் என்ற பெயரில் சென்று, நம்ப வைத்து, இந்திய இளைஞர்களிடமே இந்தியாவிற்கு நேரெதிரான போதனைகளை பரப்பி, அவர்களை இந்தியாவையே அழிக்க தயார் செய்து, ஏவியும் விட்டிருக்கிறார்கள் ? இது உலகமகா கெட்டிக்காரத்தனம் இல்லையா ? இதே போன்று நீங்கள் அமெரிக்காவிலோ இல்லை இங்கிலாந்திலோ இல்லை அரபியாவிலோ புகுந்து சாதித்துவிடுவீர்களா ? சவால். சரி அவர்கள் போதிக்கும் வரலாற்றுக்கு வருவோம்.

இந்திய கிறிஸ்தவர்கள் இந்தியாவில் வாழ்ந்தாலும் அவர்களுக்கு உண்மையான இந்திய வரலாறும் உலக வரலாறும் மறைக்கபட்டு கிறிஸ்தவத்திற்கு ஏற்றாற்போன்று திருத்தபட்ட வரலாற்றையே ஊட்டி வளர்த்திருக்கிறது ஏசுவின் கிறிஸ்தவமதம். உடலினுள் புகுந்த நச்சுக்கிருமிகள் எவ்வாறு உடல் இயக்கத்தை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வருகிறதோ அதே செய்கைகளை தான் இந்த கிறிஸ்தவ தேவாலயங்கள் ஏசு பிரானின் தூண்டுதல் பேரில் செய்கிறார்கள். இந்த புதிய வரலாறு இந்திய கிறிஸ்தவ வரலாறு ஆகும். பல கிறிஸ்தவ நண்பர்களிடமும் பாதிரியாகளிடமும் கலந்து பேசி அவற்றில் கிட்டிய சிறு இந்திய கிறிஸ்தவ வரலாற்று துளிகளை இங்கே தருகிறேன். நீங்கள் உங்களுடைய கிறிஸ்தவ நண்பர்களிடம் ஆரோக்கியமாக வரலாறு பற்றி உரையாடியிருப்பீர்களானால் இந்த வரலாற்றை நீங்களும் கண்டிப்பாக கேட்டிருப்பீர்கள். இல்லையென்றால் நீங்களே முயற்சி செய்து பாருங்கள்.

1. ஒரு கிறிஸ்தவ பிரிவினர் தந்த வரலாற்றின் படி, திருக்குறளை எழுதியது திருவள்ளுவர் இல்லையாம். பல முட்டாள்கள் பல காலத்தில் எழுதி வைத்ததாம். அவற்றையெல்லாம் ஒன்றாக திரட்டும் பணியை மட்டுமே திருவள்ளுவர் செய்தாராம். இதனால் திருக்குறளின் இழிவுக்கு (நாம் பெருமை என்று கூறிக்கொள்கிறோமே) திருவள்ளுவர் காரணமில்லையாம்.

2. திருக்குறள் உலகப்புகழ் பெற்றதோ இல்லையோ பலர் திருவள்ளுவர் தங்கள் மதத்தை சேர்ந்தவர் என்று சொந்தம் கொண்டாடுகின்றனர். இதில் ஒரு கிறிஸ்தவ கும்பலும் அடக்கம். திருவள்ளுவர் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர் என்று இந்த கிறிஸ்தவ கும்பல் சொந்தம் கொண்டாடுகிறது. இந்த திருக்குறளில் பெரிய உச்சக் கட்டம் எதுவென்றால், திருவள்ளுவர் பைபிளை பார்த்து காப்பியடித்து தான் பல குறள்கள் எழுதியிருக்கிறாராம்.

3. இன்னொரு கிறிஸ்தவ பிரிவினர் திருவள்ளுவர் ஓரினசேர்க்கையாளர் என்று கூறுகிறார்கள். இதற்கு இவர்கள் திருக்குறளில் காமத்துபாலில் உள்ள சில திருக்குறளையே எடுத்துகாட்டாக வைக்கின்றனர்.

4. அழுகிப் போய் வீசும் உடல் ஓர் நாள் சாம்பலாகும் என்ற சிந்தனையில் முற்றும் துறந்த சிவனடியார்கள் சமண பெண்களை விரும்பி கற்பழிக்க தவமிருந்தார்களாம். இதோ ஒரு கிறிஸ்தவர் போதிக்கிறார். இவர் இவர்கள் இணைய தளத்தில் வெளியிட்ட இது போன்ற 'வரலாறு'களை அவர்கள் சங்கத்தினரே நீக்கிவிட்டனர் !! என்ன கொடுமை சாமி இது ?

5. ஔவையார் கடவுளின் அருளினால் கிழவியாகவில்லையாம். அவருக்கு திருமணமாகி கணவன் விட்டுவிட்டு ஓடிவிட்டானாம். அதன்பிறகு ஔவையார் கோவிலுக்கு நேர்ந்துவிட்ட பெண்ணாக சில வருடங்கள் பலருக்கு மனைவியாக இருந்தவராம். இவரின் இந்த உண்மையான வரலாறு மறைக்கபட்டிருக்கிறதாம். இதை பக்கத்திலிருந்து நேரிலேயே கண்ட கிறிஸ்தவர்கள் கிறிஸ்தவ தேவாலயத்தில் இன்றும் மணியடித்து கொண்டிருக்கின்றனராம்.

6. பாரதியார் இளம்வயதில் சில பெண்களை பலவந்தம் செய்திருக்கிறாராம். நீங்கள் எந்த நூலகத்துக்கு சென்று பாரதியாரின் வரலாற்றை படித்தாலும் இதைக் காணலாமாம்.

7. இந்தியாவில் 12 கொடூர தீமைகள் இருந்ததாம். சதி, தீண்டாமை போன்றவைகள் இவற்றில் அடக்கமாம். கிறிஸ்தவர்களின் முயற்சியினாலும், இயேசு கிறிஸ்துவின் கிருமையினாலும் தான் இந்த தீமைகளை முன்னின்று அழித்தார்களாம். இதனால் இந்த ஆக்க வேலைகள் கிறிஸ்தவர்கள் இந்தியாவிற்கு செய்த பல நன்மைகளில் முக்கியமான ஒன்றாம்.

8. இந்தியாவில் வாழ்ந்த முன்னோர்கள் மிகவும் கேவலமான முட்டாள்களாகவும் சடங்குகளை கடைப்பிடிப்பவர்களாகவும் வாழ்ந்தார்களாம். கிறிஸ்துவின் ஆசியினாலே இவர்கள் இன்று அறிவுச்சுடர் பெற்று உலக அரங்கில் முன்னேறி வருகிறார்களாம். இந்த பெருமையும் கிறிஸ்தவர்களையே சேருமாம். இயேசு கிறிஸ்துவின் அறிவுரையின் படியே இவர்கள் தங்களின் முட்டாள்தனங்களிலிருந்து மீண்டனராம்.

9. பிரேமானந்தா சாமியார் முதல் குட்டி சாமியார், திருட்டு சாமியார் என்று இந்த ரகப்பட்ட சாமியார்களெல்லாம் இந்து மத்தின் முன்னோடித் தலைவர்களாம். சில சாமியார் தலைவர்கள் ஓரின சேர்க்கையாளர்களாக இருக்கிறார்களாம். இவர்களின் செய்கைகளிலிருந்து இந்து மதத்தின் லட்சணங்களை அறிந்து கொள்ளலாமாம். இது தான் இந்தியா தன் சுயமுயற்சியினால் வளர்த்த சமுதாயமாம்.

10. இந்து மதத்தில் ஒரு சாமிக்கு இரண்டு பொண்டாட்டியாம். இன்னொரு சாமி திருடனாம். இன்னொரு சாமி ஆற்றில் குளிக்கும் பெண்களை மறைந்திருந்து பார்க்குமாம் (நல்ல வேளை.. அதோடு நிறுத்தி கொண்டார்கள்.. இன்னும் ஒரு படி மேலே போய் இந்த சாமி பல பெண்களை பலவந்தம் செய்தது என்று சொன்னாலும் ஆச்சர்யபடுவதற்கொன்றுமில்லை). இன்னொரு சாமி பல பெண்களிடம் சல்லாபம் செய்யுமாம். இப்படி பல கதைகள் உள்ளன.

11. ஆங்கிலேயர்கள் தான் இந்தியாவுக்கு முன்னேற்ற பாதைக்கு வழிவகுத்தாம். அவர்கள் நம் ஆற்றலை வெகுவாக வளர்த்து விட்டார்களாம். புனித அன்னை என்று அழைக்கபடும் தெரசா போன்று இன்னொரு பெண் உலகிலேயே இல்லையாம். இவர் இந்து மதத்தினரை மதித்து கோவிலுக்கு சென்று சிவனை வழிபட்டாராம். அவருக்கு பெருமையும் சேர்த்தாராம்.

12. உலகமே துன்பத்தினால் துவண்டு வழி தெரியாமல் திக்கி திணறிக் கொண்டிருந்ததாம். பைபிள் நுழைந்தவுடன் எல்லா இடத்திலும் சமாதானமும் அமைதியும் பொழிந்து வழிகிறதாம். தென் கொரியாவில் 300 ஆண்டுகளுக்கு முன்னர் கிறிஸ்தவர்கள் நுழைந்த பின் சமாதான் பயங்கரமாக நிலவுகிறதாம். ஒரு நண்பரின் கூற்றுபடி இன்று கொரியாவில் 98 சதவிகிதம் கிறிஸ்தவர்களாம்.

13. இன்னும் இந்திய வரலாற்றில் இடம் பெற்ற ஒவ்வொருவருக்கும் ஒரு கதை வைத்திருக்கிறார்கள். இந்திய கிறிஸ்தவ பாதிரியார்களே இந்திய வரலாறு பற்றி ஒரு புத்தகம் வெளியிட்டால் நன்றாக இருக்கும். இதெல்லாம் கிறிஸ்தவ மிஷினரிகளின் தலைவர்களின் வீட்டில் கண்டிப்பாக புத்தக வாயிலாக இருக்கும். இது அவர்கள் போதிக்கும் விஷ கடலில் இருந்து வெறும் ஒரு துளியே. காலம் விரைவே பதில் அளிக்கும்.

இந்த வரலாற்றை கேட்டால் உண்மையான வரலாறு நமக்கே மறந்துவிடும் போல் உள்ளது. எப்படி இதை முட்டாள்கள் நம்புகிறார்கள் என்றுதான் புரியவேயில்லை. கண்ண கட்டி மயக்கம் வாந்தி பேதியே வருகுதய்யா.

13 comments:

Anonymous said...

people should realise this

Anonymous said...

yesu ungalaiyum mannippar
neengalum theriyamal sathanin pidiyil irukkireergal.

in the name jesus i bind the spirit all activities in this website.

son said...

your article is waste article. there is no truth. don't waste others time. please...

Anonymous said...

god is benificient mercyful

Veeramuthu said...

yes i do agree with this i also do not like christianity and muslim in short i am a hindu veriyan first of all we have to kill jesus and allah from our india

vimal said...

nee yeasuvi ozunkaga ariya virumbinaal bible badi

yesu thaan unnaium paditha unmi theivm avar unnai retchipparaka
amen

vimal said...

nee yeasuvi ozunkaga ariya virumbinaal bible badi

yesu thaan unnaium paditha unmi theivm avar unnai retchipparaka
amen

saravanakumar said...

yes i agree with you in our village also that peoples chiristian trying to convert the mind set of the people. This is an highly not acceptable one. Because the inspiration come through the history. Hut the chiristians are trying to mind wash the peoples

The bagavath geetha says lot of good things related to our life

and the indian writters also flesh plendy of good articals

finally i hate the chiristianism

Anonymous said...

madham enbadhu avaravar thanippatta karruthu .endha madhathaiyum kurrai sollum urimai yaarukkum kidaiyadhu....... mudindhal thirundhungada mudiyalana kutti sevira pongada.......

kajendran said...

ayya vimaluuuuu jesus paavam adivaagi setharu... avaru epdipa ungala kaapathuvaaru illa sathaana epdi alipparu aiyo..aiyo..

gajendran said...

vimaluuuu yesu avarayae kaapathikka mudiyala avaru ungala kaapatha pporara athuvun sathaanta irunthu.....

Anonymous said...

indian christians are all basically original indians and they are born for indian's blood not for american blood.
avangaloda munnorgalai kevalapaduthikolkirarkal muttalgal.

Raghu said...

Dear Neengal paditha thavarana books kalai veithu pasuvathu thavaru

Jesus is true