Tuesday 3 June 2008

இயேசு அழைக்கிறார் டி.ஜி.எஸ். தினகரனின் மோசடி

உலக அரசியலையும் வரலாற்று போர்களையும் பற்றிய விழிப்புணர்வு இல்லாத இந்தியாவின் சாதாரண பாமர மக்களை, வெளிநாட்டு வெறியர்கள் கொடுக்கும் பணத்தை, தூண்டில் புழுவாக பயன்படுத்தி கிறிஸ்துவுக்கு மதம்மாற்றும் கிறிஸ்தவ அயோக்கிய பாதிரியார்கள் பற்றி இந்திய மக்களிடம் முழு விழிப்புணர்வு எழ வேண்டும்.


மேற்கத்திய நாடுகளில் பெரும்பாலான மக்கள் விழிப்புணர்வோடு இருப்பதால் கிறிஸ்தவ தேவாலயங்களால் மக்களை ஏமாற்றி சம்பாதிக்க முடியவில்லை. அதனால் இவர்களின் சனிப்பார்வை இந்தியாவில் வாழும் பாமர மக்களிடம் திரும்பியுள்ளது.

இது போன்ற பொது அறிவு இல்லாத பல இந்திய கிறிஸ்தவ பாதிரியார்கள் மதமாற்ற வேலைகளில் ஈடுபடுகின்றனர். இவர்கள் தங்கள் கண்களை தங்கள் கையாலேயே குத்துகிறோம் என்பது கூட அறியாத அறிவிலிகளாக இருக்கின்றனர். ஆனால், டி.ஜி.எஸ். தினகரன் போன்ற பல பாதிரியார்கள், உலக அறிவு இருந்தும் தங்களுக்கு கிடைக்கும் பணத்திற்காக இந்திய நாட்டிற்கே துரோகம் செய்கின்றனர். இவர்களின் செயல் எவ்வாறு தகும் ?
சில ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த "இயேசு அழைக்கிறார்" என்ற புத்தகத்தை நாத்திகம் இராமசாமி வெளியிட்டுள்ளார். அதிலிருக்கும் சில வரிகளை மட்டும் இங்கே. புத்தகம் கிடைத்தால் வாங்கி படியுங்கள்.
தற்காலத்தில் உலகிலேயே மிகவும் கொடுமையானது - அறிவில்லாத முட்டாளாக இருப்பது. ஆகவே யாவற்றையும் படித்து உங்கள் அறிவு என்னும் தீபத்தை ஒளிரச் செய்யுங்கள்.


வரலாற்றை நன்றாக கவனியுங்கள். ஆப்பிக்காவில் பஞ்சம் தலைவிரித்தாடிய போது தான் கிறிஸ்தவ கயவர்கள் மதமாற்ற வேலைகளை ஆரம்பிக்க பெருமளவில் நுழைந்தார்கள். இந்தியாவில் காலரா போன்ற நோய்களை காரணங்காட்டி மருத்துவம் கல்வி போன்ற துறைகளில் நுழைந்தார்கள். உலகில் கிறிஸ்து இல்லாத இடங்களில் எங்கு பூகம்பம் ஏற்பட்டாலும் இந்த கயவர்கள் கூடாரம் போட்டு விடுவார்கள். இவர்களின் வெறிக்கு அந்த இறைவனே நல்ல பாடம் புகட்டுவான் என்பதில் ஐயமில்லை.


புத்தகம் - இயேசு அழைக்கிறார்
ஆசிரியர் - நாத்திகம் இராமசாமி
-----------------------
நான் பாவ மன்னிப்புச் சீட்டை விற்கமாட்டேன் ! காணிக்கை கொடுத்துவிட்டால் , செய்த பாவம் கரைந்துவிடும் என்பது மாபெரும் மோசடி" - என்று பாதிரியார் மார்ட்டின் லூதர் எதிர்ப்பு முழக்கமிட்டார்!
அவர் குரலைக்கேட்டு ஐரோப்பாவே அதிர்ந்தது !
பக் 8
இந்த நாட்டின் சமூகக் கொடுமையால் வயிறு காய்ந்த, தலைகாய்ந்த மக்களைப் படம் பிடித்துக் கொண்டு , வெளி நாட்டிலே காட்டி "இந்தப் பிச்சைக்கார மக்களிக்கு உதவுங்கள் " என்று கேட்டு. லட்சம் லட்சமாக வாங்கி , வாங்கி பணத்தை கொண்டுவந்து , மாடமாளிகை கட்டி சுகபோகமாக வாழ்கிற இவர்களையா இயேசு அழைப்பார்?
பக் 12
இன்றைய உலகத்தில் வாழும் 600 கோடி மக்களில் சகோதரன் தினகரனை மட்டுமே இயேசு தேர்ந்தெடுத்து, இவர் தங்கியிருக்கும் ஸ்டார் ஓட்டல்களைத் தேடிப் போய் காட்சியளிக்கிறார், மீதி உள்ள 599 கோடியே, 99 லட்சத்து, 90999 பேரும் தினகரனைப் போல இரட்சிக்கப்பட்ட பரிசுத்தவான்கள் அல்ல என்று இயேசு நினைக்கிறார் என்றால் , இது இயேசுவையே தினகரன் அவமானப்படுத்தும் செயலா? இல்லையா?
பக் 16
மலைகளையும், மாநதிகளையும், கடலையும் படைத்த கர்த்தர், கேவலம் ஒரு பல்கலைக் கழகத்தை உண்டாக்க தினகரனிடம் கெஞ்ச வேண்டுமா? என்னெ, தினகரனின் வல்லமை! தினகரனின் துணிச்சல் !
பக் 22
உலகத்தில் பல லட்சம் பேர் இவரால் நோய் நீங்கி சுகவாழ்வு வாழ்கிறார்கள் என்றால், இவர் ஏன் தனக்கு " கிட்னி ஆப்ரேஷன்" செய்து கொள்ள அமெரிக்க-புரூக்ளின் ஆஸ்பத்திரிக்குப் போனார்?
பக் 34
அப்படிப்பட்ட நீர், உமது அற்புத சுகமளிக்கும் ஜெபத்தை செய்து கொண்டு, பொதுமேடையில் மின்சாரக் கம்பியைத் தொடுவதற்குச் சம்மதிக்கிறீரா?
உமது ஜெபத்தால் குருடன் விழிப்பான் , ஊமை பேசுவான் என்றால் , உமது ஜெபத்தால் மின்சக்தியும் கட்டுப்படும் தானே ?
மின்சாரகம்பியைப் பொது மேடையில் தொட்டு உமது சரீர , ஆத்மீக அற்புதத்தைக் காட்டினால் உம்மைக் கர்த்தரின் சக்தி படைத்தவர் என்று ஒப்பலாம் !
பக் 37
சகோதரன் தினகரனுக்கு சிறுநீரகக் கோளாறு ஏற்பட்டு அதற்காக 1985-ல் அமெரிக்கா போய் கிட்னி ஆபரேஷன் செய்து கொண்டார் என்று செய்தி வெளியாயிற்று.
ஆனால் , தினகரனோ அப்படி எந்த நோயும் தனக்கு இல்லை என்றும், ஆப்ரேஷன் எதுவும் நடக்கவில்லை என்றும் மேடைக்கு மேடை மறுப்புச் சொல்லி வந்தார்.
ஆனால் , 21-5-1986 அவர் குடும்பத்தாருக்கு ஏற்பட்ட பயங்கர கார் விபத்து போது தினகரனின் மகன் பால் தினகரன் என்பவர் பத்திரிகைகளுக்கு பேட்டியின் போது -
"என் தந்தை சென்ற ஆண்டு கிட்னி ஆப்ரேஷன் செய்து கொண்டார்" என்று உண்மையைச் சொல்லிவிட்டார்.
"எல்லாருக்கும் நோய் போகஜெபிக்கும் தினகரனுக்கே மகப் பெரிய நோய் ஏன் வந்தது ? " - என்று மக்கள் கேட்டு விடக் கூடாதே என்ற பயத்தில் தான், தினகரன் தனது நோயை பற்றி பொய் சொல்லி வந்திருக்கிறார்.
பக் 89வங்கிப் பணியை உதறிவிட்டு "இயேசு அழைக்கிறார்" கூட்டங்களில் கோடீசுவரரான டி.ஜி.எஸ்.தினகரன், 1962-இல் இயேசுவை 3 மணி நேரம் கண்டாராம் ! 1981-இல் ஒரு தேவதூதன் காருண்யா பல்கலைக்கழகத்தின் வரைபடத்தைக் கொடுத்தானாம் ! ஒரு லட்சம் பேர் கூடுகின்ற நற்செய்திக் கூட்டங்களுக்குத்தான் தினகரன் போவாராம் ! அங்கே இவரது ஒலி-ஒளிப் பேழைகள் மட்டும் விற்கப்படுமாம் ! தலையில் கை வைத்து ஆசீர்வதிப்பதற்கு 1000 ரூபாய் கட்டணமாம். மனைவி, மகன், மருமகள், பேரன் - பேத்தி அனைவரும் பெண்கள், வாலிபர், சிறார் கூட்டங்களை நடத்த, பத்திரிக்கை, தொலைக்காட்சி, பல்கலை, ட்ரஸ்ட் என்று பன்னாட்டு நிறுவனமாய்ச் சுரண்டி நிற்கும் பகற்கொள்ளைக்காரன் டி.ஜி.எஸ். தினகரனைத் தோலுரிக்கிறார் நாத்திகம் இராமசாமி.

வாழ்க பாரதம். ஜெய்ஹிந்த்.

5 comments:

R.DEVARAJAN said...

We appreciate yr. bold views.

Dev

Anonymous said...

DGS dhinakaran is a great person.No one have right to talk about him.

Anonymous said...

definitely you will be in the Hell soon...

Anonymous said...

JESUS BLESS YOU. one day you know that my father jesus.he will really meet you soon.dont hate. He loves you

John Danushan said...

jesus calls you to come friend...