Sunday 2 November 2008

இறைவன் ஆணா ? இல்லை பெண்ணா ? உலக மதங்களின் பேத்தல்

இறைவன் ஆணா ? இல்லை பெண்ணா ? உலக மதங்களின் பேத்தல்

இவ்வுலகை இயக்கி கொண்டிருக்கும் இறைவன் ஆணா ? பெண்ணா ? இவ்வுலகில் இருக்கும் பெரும்பாலான மக்கள் பின்பற்றும் மதங்களை கொண்டவர்கள் இறைவனை ஆணாகவே விவரிக்கின்றனர். நண்பர்களே மீண்டும் சிந்தியுங்கள்.

ஆண் பெண் என்பது விலங்குகளின் உற்பத்திக்காக உருவாக்கப் பட்டதே. இவை இரண்டுமே சமமானவை. இதில் ஆண் வலிமை மிக்கவனாகவே பழங்காலத்தில் இருந்து பல மதங்களும் கலாச்சாரங்களும் கருதி வந்திருக்கின்றனர். ஆனால், இறைவன் பால், ஜடம் போன்ற அனைத்துக்குமே அப்பாற்பட்டவனாகவே இருக்கிறான். அவன் படைத்த அனைத்து பொருட்களுமாக அவனே இருக்கிறான். இந்த உண்மையான அரிய தத்துவத்தை உலகில் எந்த நாட்டினருமே உணரவில்லை, பிறருக்கு உணர்த்தவில்லை.

சிவனையும் சக்தியையும் ஆண் பெண்ணாக சித்தரித்து, சக்தி சிவத்தை இயக்கும் ஓர் அங்கமே என்றும், சிவனும் சக்தியும் ஒன்றே என்ற தத்துவத்தையும், இதை எளிதாக பிறருக்கு உணத்த, அர்த்தநாரீஸ்வரர் என்ற உருவத்தையே படைத்தார்கள் நம் முன்னோர்கள். இது இறைவன் பாலுக்கு அப்பாற்பட்டவன் என்ற உண்மையை நேரடியாகவே உணர்த்துகிறது.

கிறிஸ்வமும் சரி, இசுலாமும் சரி, இறைவனை ஆண் என்றும், பெண்களை அடிமைகளாகவும் சித்தரிக்கின்றன. நண்பர்களை மீண்டும் சிந்தியுங்கள். இறைவன் ஆணா ? இல்லை பெண்ணா ? இல்லை பாலுக்கு அப்பாற்பட்டவனா...

இன்னுமா ஆணை இறைவன் என்று வணங்குகிறீர்கள் ? பைபிளை எழுதிய பழங்காலத்தவர்கள் கூற்றின்படி ஏசு என்ற மனிதரை இறைவனாக கற்பனை செய்வதை விடுத்து உண்மையான இறைவனை வணங்குங்கள். வழிபடுங்கள். உங்களுக்கு சுகம் உண்டாகட்டும்.

4 comments:

Unknown said...

yesu unnaium nesikirar. ( Jesus loves you.)

Unknown said...

First read bible. then tell this one. unmaiyai thedi makkal vanthal yen unaku poramai. unaku unmai devam vendumanal niyum va neeyum en sakotharen. ne pavathil kedanthu kasdapadukirai unaku umaiyana santhosam illai. nanum unnai pol oruvan anal ippothu unmaiya santhosathodu valkiren. ne oru murai yesuvidam kettupar . unaku unmai anbu santhosam mahilchi therium. neyae sollu yaravathu unmai santhosatham anbu thandal averai eppadiyappa vida mudium. christham matham alla markam. unnayum yesu nesikirar brother . valha india valarka india unum valha un kuduma santhosamaha irkuka na yesuvidam prathanai seikiren.

Anonymous said...

Kadavul ilai entru muddal soluvaan

ஜோனதான் said...

அன்பு சகோதரி பிரியா அவர்களே. நீங்கள் கஷ்டத்தில் இருக்கும் போது உங்களுக்கு கிறிஸ்தவத்தை சேர்ந்தவர்கள் உங்கள் மன அமைதிக்காக பல கதைகள் கூறியிருக்கலாம். உலகின் உண்மையான தன்மையை அறியவும், உலகை பரந்த நோக்கில் பார்க்கும் தன்மையும் உங்களுக்கு அமையாமல் போயிருக்கலாம். ஏசு என்கிற ஒரு மாயையை உங்களுக்கு உருவாக்கியிருக்கிறார்கள். புனிதமான மாசற்ற, இவ்வுகையும் அண்டத்தையும் இயக்கி கொண்டிருக்கின்ற பரமபிதாவுக்கு நம் முன்னோர்கள் வைத்த பெயரே சிவனும் சக்தியும். நீங்கள் கர்த்தரும் சிவனும் சக்தியும் ஒன்றே என்று எண்ணி அதே சந்தோசத்தையும் மன அமைதியையும் அனுபவிக்க முடியும். மதம் என்பது ஒரு அரசியல் தானே தவிர வெவ்வேறு அல்ல. இறைவன் ஒருவரே. இறைவனை ஒளியாக நீண்ட தவத்திற்கு பின் தரிசித்திருக்கிறார்கள் நம் முன்னோர்களும் சித்தர்களும். கிறிஸ்தவம் தான் உண்மையானது என்று வெளிநாட்டு பித்து பிடித்தவர்கள் நம்மை ஏமாற்றுகிறார்கள். நீங்கள் எந்த மதத்தையும் நம்ப வேண்டாம். உண்மையான இறைவனிடம் நேரடியாக பேசுங்கள். எந்த பேர் வேண்டுமானாலும் கடவுளுக்கு வைத்து கொள்ளுங்கள். உங்களுக்கு வாழ்வில் இன்பம் பெருகும்.