Showing posts with label முட்டாள் இந்தியர்கள் கிறிஸ்தவம் மதமாற்றம். Show all posts
Showing posts with label முட்டாள் இந்தியர்கள் கிறிஸ்தவம் மதமாற்றம். Show all posts

Sunday, 17 August 2008

இந்தியர்கள் முட்டாள்களா ?? நீங்களே தீர்ப்பு கூறுங்கள்.


இந்தியர்கள் முட்டாள்களா ?? நீங்களே தீர்ப்பு கூறுங்கள்.

இனவெறியும் ஆதிக்க வெறியும் கொண்ட ஆங்கிலேயர்களின் 18-19 ம் நூற்றாண்டின் ஆங்கில மொழியின் பிரதி ஒன்றை காப்பியடித்து எடுத்து கொண்டு இந்தியா முழுவதும் ஆங்கில மொழி பிரதியை பரப்பி விட்டுவிட்டார்கள். அதன் பிறகு ஆங்கிலேயர்களின் ஆங்கில மொழி அவர்களிடையே பல மாறுதல்களுக்குள்ளாகி 'நவீன' மாகிவிட்டது. அவர்கள் தங்கள் பழைய மொழியை மியூசியத்தில் வைத்து விட்டார்கள். அப்படி மியூசியத்தில் வைக்க பட்ட மொழியை இன்று இந்தியாவே தன்னுடைய 5000 ஆண்டு காலத்திற்கும் மேற்பட்ட வளமையுடைய மொழியை அழித்து பயன்படுத்தி கொண்டுள்ளது. அவர்களின் பழைய ஆக்கங்களுக்கு இன்னும் இவ்வுலகில் உயிர் இருக்கிறதே என்று அவர்களுக்கெல்லாம் பெருமை. ஆங்கிலேயர்களுடைய முத்திரைகள் கடைசியாக இவ்வுலகில் இருந்து அழிவது இந்தியாவிலிருந்து தான்.

என்ன கொடுமைடா சாமி இது ? தன்னைக் கொன்றவனின் மொழியை எடுத்து வளர்த்து அவனே விட்டுவிட்ட பிறகும் பேணி வளர்த்து வருவது முட்டாள்தனத்தின் உச்சமல்லவா ?

இது அவர்கள் விட்டு சென்ற இரயில் கட்டமைப்புகளுக்கும் (Railway System) கல்வி கட்டமைப்புகளுக்கும் என்று பல அமைப்புகளுக்கும் பொருந்தும்.

இந்தியாவின் இத்தகைய 'முட்டாள்' தன்மையை பயன்படுத்திக் கொள்ள பல ஆண்டுகளாக முயன்று வருவது தான் இந்த கிறிஸ்தவ மத மாற்றம். உலகில் உள்ள பல கிறிஸ்தவர்கள் முட்டாள்தனம் என்று விட்டுவிட்ட பல பண்பாடுகளையெல்லாம் இன்னும் இந்திய முட்டாள்கள் பின்பற்றி வருகிறார்கள். அது மட்டுமல்ல - இது புது பண்பாடு என்று புது முட்டாள்களுக்கும் பரப்பியும் வருகிறார்கள். கிறிஸ்தவர்களின் பழைய 'முட்டாள்' பண்பாடுகள் இவ்வுலகிலிருந்து அழிவதும் இந்தியாவிலிருந்து தான். இந்தியர்கள் தான் கடைசி வரை விடாப்பிடியாக பண்பாடுகளை தாங்கிக் கொண்டிருப்பர். இதற்காகத்தானே கிறிஸ்தவ மதமே இந்தியாவில் பரப்பபடுகிறது.

யாரோ முட்டாள்தனமென்று தூக்கி எறிந்து விட்ட பண்பாடுகளை புதிது என்று இந்தியா முழுவதும் பரப்பும் இந்தியர்களை எவ்வாறு அழைப்பது ? நீங்களே தீர்ப்பு கூறுங்கள்.

இவ்வுலகில் ஓர் நாட்டில் அதிக முட்டாள்கள் வாழ்வது இந்தியாவில் தான். இதை உலகுக்கு உணர்த்தி கொண்டிருக்கும் கிறிஸ்தவ மதத்துக்கு நன்றி !!!