Showing posts with label இறைவன் ஆண் பெண் சிவன் சக்தி. Show all posts
Showing posts with label இறைவன் ஆண் பெண் சிவன் சக்தி. Show all posts

Sunday, 2 November 2008

இறைவன் ஆணா ? இல்லை பெண்ணா ? உலக மதங்களின் பேத்தல்

இறைவன் ஆணா ? இல்லை பெண்ணா ? உலக மதங்களின் பேத்தல்

இவ்வுலகை இயக்கி கொண்டிருக்கும் இறைவன் ஆணா ? பெண்ணா ? இவ்வுலகில் இருக்கும் பெரும்பாலான மக்கள் பின்பற்றும் மதங்களை கொண்டவர்கள் இறைவனை ஆணாகவே விவரிக்கின்றனர். நண்பர்களே மீண்டும் சிந்தியுங்கள்.

ஆண் பெண் என்பது விலங்குகளின் உற்பத்திக்காக உருவாக்கப் பட்டதே. இவை இரண்டுமே சமமானவை. இதில் ஆண் வலிமை மிக்கவனாகவே பழங்காலத்தில் இருந்து பல மதங்களும் கலாச்சாரங்களும் கருதி வந்திருக்கின்றனர். ஆனால், இறைவன் பால், ஜடம் போன்ற அனைத்துக்குமே அப்பாற்பட்டவனாகவே இருக்கிறான். அவன் படைத்த அனைத்து பொருட்களுமாக அவனே இருக்கிறான். இந்த உண்மையான அரிய தத்துவத்தை உலகில் எந்த நாட்டினருமே உணரவில்லை, பிறருக்கு உணர்த்தவில்லை.

சிவனையும் சக்தியையும் ஆண் பெண்ணாக சித்தரித்து, சக்தி சிவத்தை இயக்கும் ஓர் அங்கமே என்றும், சிவனும் சக்தியும் ஒன்றே என்ற தத்துவத்தையும், இதை எளிதாக பிறருக்கு உணத்த, அர்த்தநாரீஸ்வரர் என்ற உருவத்தையே படைத்தார்கள் நம் முன்னோர்கள். இது இறைவன் பாலுக்கு அப்பாற்பட்டவன் என்ற உண்மையை நேரடியாகவே உணர்த்துகிறது.

கிறிஸ்வமும் சரி, இசுலாமும் சரி, இறைவனை ஆண் என்றும், பெண்களை அடிமைகளாகவும் சித்தரிக்கின்றன. நண்பர்களை மீண்டும் சிந்தியுங்கள். இறைவன் ஆணா ? இல்லை பெண்ணா ? இல்லை பாலுக்கு அப்பாற்பட்டவனா...

இன்னுமா ஆணை இறைவன் என்று வணங்குகிறீர்கள் ? பைபிளை எழுதிய பழங்காலத்தவர்கள் கூற்றின்படி ஏசு என்ற மனிதரை இறைவனாக கற்பனை செய்வதை விடுத்து உண்மையான இறைவனை வணங்குங்கள். வழிபடுங்கள். உங்களுக்கு சுகம் உண்டாகட்டும்.