குழந்தையும் தெய்வமும் ஒன்று என்று கூறுவார்கள். அப்படிப்பட்ட குழந்தையை அவர்களுடைய தெய்வத்தை விற்பனை செய்வதற்கு பயன்படுத்தபடும் திருட்டு நிறுவனம் தான் இந்த World Vision India என்பதாகும்.
இதை போல் ஒரு உலக மகா திருட்டை உலகில் எங்கும் பார்க்க இயலாது. இந்து மக்களிடம் ஏழைக்குழந்தைகளையும் அவர்களின் ஏழ்மை, படிப்பு, உடல் நலம் ஆகியவற்றை காட்டி காட்டி பணம் பறித்து, அந்த பணத்தை "ஏசு கிறிஸ்து உமக்கு அருள்கிறார்... இதை ஏற்றுக் கொண்டு கிறிஸ்துதை ஸ்தோத்தரியும்" என்று கூறி கூறி அப்பட்டமாக அக் குழந்தையையும் அக் குழந்தையின் சந்ததிகளையும் கிறிஸ்தவுக்குள் கொண்டுவரும் உலக மகா திருட்டு நிறுவனம் தான் இந்த Fucking World Vision India.
எப்படி இவர்கள் சாமர்த்தியம் ?
ஏழைக்குழந்தைகளையே காட்டுவதால் இவர்களை நம்பிவிடாதீர்கள். நம் நாட்டு ஏழைக் குழந்தைளின் புகைப்படங்களை வைத்து எல்லா நாடுகளிலும் அன்பளிப்பு என்ற பெயரில் பிச்சை எடுத்து அப்பாவி இந்து மக்களை மதம் மாற்றி வரும் அப்பட்டமான திருட்டு நிறுவனம் தான் இந்த World Vision.
உலகிலேயே மிகப்பெரிய அன்பளிப்பு பணத்தை அள்ளும் நிறுவனம் இதுவே. இவர்களின் முதன்மை குறிக்கோள் ஏழை குழந்தைகளுக்கு உதவுவது அல்ல. ஏழைக்குழந்தைகளை காட்டி தம் மதத்தை பரப்புவதே முதன்மை குறிக்கோள்.
ஆடு நனைகிறதென்று ஓநாய் அழுததாம் - இது பழமொழி. வெள்ளைக்காரனும் அவன் நிறுவனங்களும் அடுத்தவனை அடித்து பிடுக்கி பிழைப்பதையே பலநூறு ஆண்டுகளாக செய்து வருகிறார்கள் என்பதை வரலாறு நமக்கு ஒவ்வொரு நிகழ்விலும் கூறுகிறது.
இந்தியர்களே.. என் சகோதரர்களே.. சிந்திப்பீர். செயல்படுவீர்.
நம்மிடம் கொள்ளையடித்து நம்மையே மதம்மாற்றிவரும் இந்த திருட்டு நரிகளுக்கு நன்கொடை அன்பளிப்பு கொடுக்காதீர்கள்.
இதே உண்மையை பிரதிபலிக்கும் "ஜடாயு எண்ணங்கள்"
http://jataayu.blogspot.com/2008/07/world-vision.html
வேர்ல்டுவிஷன்(World Vision) அமைப்புக்கு நன்கொடை அளிக்காதீர்கள்!
வேர்ல்டு விஷன் (World Vision) என்கிற இந்த அப்பட்டமான கிறிஸ்தவ மதமாற்ற அமைப்பு இந்திய சமூகத்திற்கு சேவை செய்வதாக உணர்ச்சிகரமான பிரசாரத்தை பெரும் பொருட்செலவில் பல்வேறு ஊடகங்களிலும், பல்வேறு விதமான விளம்பர யுக்திகள் மூலம் செய்து வருகிறது. தொலைக்காட்சி, பத்திரிகைகள், இணையம் ஒன்று விட்டுவைக்காமல் இந்தியாவின் ஏழைக் குழந்தைகளின் முகங்களைக் காட்டி தங்கள் மத ஆக்கிரமிப்பு அரசியல் அதிகாரத்திற்கு நியாயம் கற்பிக்கும் இந்த அமைப்புக்கு பல மத்திய வர்க்க இந்துக்கள் அப்பாவியாக நன்கொடைகளும் அளித்து வருகின்றனர்.
உலகெங்கும் NGO என்ற போர்வையில் தன் கரங்களை விரித்திருக்கும் இந்த அதிகார அமைப்பு அப்பட்டமான கிறிஸ்தவ மதவெறியர்களாலும், அடிப்படை வாதிகளாலும் நடத்தப் படுகிறது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் தங்கள் எஜமானர்களிடமிருந்து பெறும் கணக்கிலடங்கா பணபலம் போதாதென்று இந்த அமைப்பு நடுத்தர வர்க்க இந்தியர்களைக் குறிவைத்து, அவர்களிடம் நன்கொடைகள் வேண்டி பயங்கர பிரசாரமும் செய்கிறது.
திடீரென்று உங்கள் முகவரிக்கு வேர்ல்டு விஷனிடமிருந்து ஒரு கடிதம் வரும் -ஆந்திராவில் ஒரு குக்கிராமத்தில் உள்ள ஆஞ்சனேயா என்ற சிறுவனுக்கு உதவுங்கள் என்ற அப்பாவித் தனமான கோரிக்கையோடு. அந்த வண்ணமயமான விளம்பர நோட்டீசில் லேசாக ஓரத்தில் "World Vision is a Christain Charity" என்று குறு-அச்சில் (fine print) இருக்கும், கிரெடிட் கார்டு பில்களில் சம்பிரதாயமாக பின்பக்கம் அச்சிட்டிருப்பது மாதிரி.. இவர்களுக்கு நன்கொடை அளிப்பவர்களுக்கு அதனால் பயன்பெறுபவர்கள் என்று சிறுவர் படங்கள் பளபள லேமினேட்டில் அனுப்பி வைக்கப் படும் - இதைப் பெருமையாக, என் இந்து நண்பர் ஒருவர் காண்பிக்க வேறு செய்தார்!
•பணியாளர்களை வேலைக்கு எடுக்கும்பொழுதே அவர்கள் ஏசுவின் நற்செய்தியை விசுவசிப்பவர்களாக மட்டுமல்ல, உலகளாவிய மதமாற்ற பிரசாரத்திற்குத் துணை போகக் கூடியவர்களாகவும் இருக்க வேண்டும் என்று இந்த அமைப்பின் வலைத்தளம் தெளிவாகவே அறிவிக்கிறது.
•Vodaphone (முன்னாள் Hutch) வாடிக்கையாளர் முகவரிகளை இந்த அமைப்புக்கு அங்குள்ள கிறிஸ்தவ உயர் அதிகாரியே கடத்தியிருக்கிறார்.
•அகில உலக புத்தசபை இந்த அமைப்பைப் பற்றி அபாய அறிவிப்பு அளித்துள்ளது.
ஏழைகளுக்குத் தானே உதவுகிறார்கள், அதனால் என்ன என்று காஷுவலாக இவர்களுக்கு நன்கொடை அளிக்கும் மேல்தட்டு, நடுத்தர வர்க்க இந்துக்களே !
நீங்கள் கஷ்டப் பட்டு உழைத்துச் சம்பாதித்த பணத்தை எந்த கிறிஸ்தவ மிஷநரி அமைப்புக்கும் தயவு செய்து கொடுக்காதீர்கள். உங்கள் தர்மத்தையும், நம்பிக்கையையும் குழிதோண்டிப் புதைப்பதற்காக ராப்பகலாக வேலை செய்து கொண்டிருக்கும் ஒரு பேய்த்தனமான ஆக்கிரமிப்பு நிறுவன சக்தியின் கரங்களை உங்கள் பணத்தால் வலுப்படுத்துவது தற்கொலைக்கு ஒப்பான செயல் என்று உங்களுக்குத் தோன்றவில்லையா? இது நீங்கள் வணங்கும் தெய்வத்திற்கும், உங்கள் முன்னோர்களின் புனித நினைவுக்கும், உங்களை ஊட்டி வளர்த்த இந்த மண்ணுக்கும், நீங்கள் அங்கம் வகிக்கும் இந்து சமுதாயத்திற்கும் இழைக்கும் துரோகம் அன்றி வேறில்லை.
ஏனென்றால், இவர்களது விஷன் உலக நல்வாழ்வோ, மனித சுதந்திரமோ அல்லவே அல்ல. மேற்கில் தேய்ந்து, மறைந்து, சிதறி வரும் கிறிஸ்தவ அரசியல் அதிகாரத்திற்கு வளரும் நாடுகளில் இடம் தேடுவது, அவ்வளவே. தங்கள் குப்பைகளை வெளிநாடுகளில் கொட்டுவதற்குக்
காண்டிராக்ட் தருவது போல, தாங்களே நம்பாத கிறிஸ்தவத்தை இந்தியாவிலும், சீனாவிலும் மார்க்கெட் செய்வது வணிக, அதிகார நோக்கில் சாதகம் தரும் என்று தான் மேற்கு நாடுகளின் சில செல்வந்தவர்களும், நிறுவனங்களும் இத்தகைய "விஷன்"களுக்கு ஆதரவும், பொருளுதவியும் அளித்து வருகின்றனர், இதன் பின் எந்த "ஆன்மிக" நோக்கமும் இல்லை.
கிறிஸ்தவம் என்கிற கோகோ கோலா
கிறிஸ்தவ மிஷநரிகளின் வரலாறு முழுவதும் அதைத் தான் சொல்கிறது.
ஆசியாவின் காலனிய வரலாறும், கிறிஸ்தவ மிஷனரிகளும்
வேர்ல்டு விஷன் மட்டுமல்ல, பல வேடங்களில் சமூக சேவை என்ற போர்வையில் மதமாற்றம் செய்யும் அனைத்து அமைப்புகளையும் இந்துக்கள் தவிர்க்க வேண்டும். இதோ ஒரு பட்டியல் -
இந்தியாவில் இயங்கும் மெகா மதமாற்ற அமைப்புகள் (The Blacklist)
நீங்கள் சமூகப் பணிகளுக்காக நன்கொடைகளும், உதவிகளும் கண்டிப்பாக செய்ய வேண்டும். ஏராளமான இந்து அமைப்புகள் எந்தக் கூச்சலும் இல்லாமல், மிகப் பெரிய அளவில், எந்தப் பாரபட்சமும் இல்லாமல் இந்தியர்கள் அனைவரும் பயன்பெறும் வண்ணம் அருமையான சேவைப் பணிகளைச் செய்து வருகின்றன. அந்த அமைப்புகளுக்கு உதவலாமே !
இந்து சேவை அமைப்புகளின் தொண்டு - கட்டுரை
இந்து சேவை அமைப்புக்கள் பட்டியல்
அது மட்டுமில்லாமல், உங்கள் ஊரில், நீங்கள் வாழும் பகுதியிலேயே கல்வி, மருத்துவம், சுயதொழில் போன்றவற்றுக்கு உதவும் பல சிறு அமைப்புகள் இருக்கலாம். எந்த உள்நோக்கமும் இல்லாத இத்தகைய அமைப்புகள் ஆரவராமில்லாமல் பல நல்ல பணிகளைச் செய்துவரும். அவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுத்தும் நீங்கள் உதவலாமே!
இந்திய தேசிய ஒற்றுமையையும், மத நல்லிணக்கத்தையும் விரும்பும் கிறிஸ்தவர்களும் வேர்ல்டு விஷன் போன்ற மதமாற்ற அமைப்புகளின் செயலுக்குத் துணைபோகக் கூடாது. உள்நோக்கம் இல்லாத சமூக சேவையை மட்டுமே அவர்கள் ஆதரிக்கவேண்டும்.
மதமாற்ற பிரசாரத்திற்கு எதிராக பெங்களூர் கிறித்தவர்கள்
மதர் தெரசாவின் மகளுக்கு: சில கேள்விகள்
மகாத்மா காந்தி சொல்கிறார் -
“எனது அச்சம் இது தான் – இந்து மதம் பொய் என்று இப்போதைக்கு கிறித்தவ நண்பர்கள் வெளிப்படையாகச் சொல்வதில்லை. ஆனால் அவர்களது மனதில் இந்துமதம் தவறானது, தாங்கள் நம்பும் கிறித்தவ மதமே உண்மை என்ற எண்ணங்களை வளர்த்து வருகிறார்கள். இப்போது நடக்கும் கிறித்தவ (மதமாற்ற) முயற்சிகளையெல்லாம் பார்க்கும்போது, இந்துமதத்தின் அடிப்படையை வேரறுத்துவிட்டு அங்கு வேறு ஒரு மதத்தை நிறுவப் பார்ப்பது தான் அவர்களது நோக்கம் என்பது புரியும்”
– ஹரிஜன், மார்ச் 13, 1937.
“என்னிடம் மட்டும் சட்டம் இயற்றும் அதிகாரம் இருந்தால், எல்லா மதமாற்றங்களையும் நிறுத்தி விடுவேன். இந்து குடும்பங்களில் ஒரு மிஷநரியின் வருகை என்பது குடும்பத்தைக் குலைக்கும் செயல்; உடை, ஒழுக்கம், மொழி, உணவு உள்பட கலாசாரத்தையே மாற்றும் செயல் என்றே ஆகிவிட்டிருகிறது”
- ஹரிஜன், நவம்பர் 5, 1935.
எழுதியவர் ஜடாயு at 4:22 PM
Labels Christianity, evangelism, India, Service, இந்தியா, கிறிஸ்தவம், சமூகம், சேவை, மதமாற்றம்
http://jataayu.blogspot.com/2008/07/world-vision.html
நன்றி: ஜடாயு எண்ணங்கள்.